சென்னை அணியில் இருந்து ஜடேஜா நீக்கமா? இந்த போட்டியில் விளையாடாதது ஏன்..? தோனியின் பதில்..!
இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன.
15வது ஐபிஎல் போட்டியின் 55 லீக் போட்டி மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்த போட்டியில் ஜடேஜா விளையாடவில்லை,அவருக்கு பதிலாக சிவம் துபே மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜடேஜா முழு உடற்தகுதியுடன் இல்லாததால் அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை என சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
அதே போல் கடந்த போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய ப்ரெடோரியஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டூவைன் பிராவோ மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருத்துராஜ் கெய்குவாட் 41 ரன்களில் அவுட்டானார். தேவான் கான்வே அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார் .
அவர் 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அதன் பின் சிவம் துபே 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது டெல்லி அணி.