ஜாக்குலினுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் கூறிய மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்....!

Delhi India
By Nandhini Feb 14, 2023 11:59 AM GMT
Report

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் இன்று காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரூ.200 கோடி மோசடி -

இரட்டை இலை சின்னத்தை மீட்க இடைத்தரகராக செயல்பட்டு, பல மோசடிகளை செய்தவர்தான் இந்த சந்திரசேகர். மேலும், இடைத்தரகராக செயல்பட்டு சின்னத்தை மீட்க, டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். 2017ம் ஆண்டு டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைதான சந்திரசேகர், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது, 21க்கும் அதிகமான மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

சிறையில் இருந்தபடியே, பிரபல தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டார். சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க உதவுவதாக கூறி, பணம் பெற்றதாக அதிதியே புகார் அளித்தார்.

சுமார் ரூ.217 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

jacqueline-fernandez-sukesh-chandrasekhar

ஜாக்குலினுக்கு காதலர் தின வாழ்த்து

இந்நிலையில், நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது சுகேஷ் சந்திரசேகர் பேசுகையில், “என்னுடைய முடிவிலிருந்து அவளுக்கு காதலர் தின வாழ்த்துகள்,” என்று சுகேஷ் கூறினார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கும், நடிகை க்கும் கடந்த காலங்களில் நெருங்கிய தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.