ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ்-க்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு

Delhi
By Nandhini Sep 26, 2022 07:50 AM GMT
Report

ரூ.200 கோடி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ்-க்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக ஏற்கெனவே ஜாக்குலினுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

jacqueline-fernandez

அமலாக்கத் துறையினர் அதிரடி விசாரணை

இதனையடுத்து, சமீபத்தில் மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வந்தார். அப்போது, அங்கு அவரை அமலாக்கத் துறையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே பணப் பரிவர்த்தணை நடந்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடிகை ஜாக்குலினின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர். மேலும், நடிகை ஜாக்குலினிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுகேசின் மோசடிகள் குறித்து நடிகை ஜாக்குலின் பல திடுக்கிடும தகவல்களை தெரிவித்தார்.

இடைக்கால ஜாமீன்

இந்நிலையில், ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.