அம்மா ஆசைக்காக..இரட்டை ரோஜா சின்னத்துடன் புதிய கட்சி துவங்கிய ஜெ.ஜெயலட்சுமி..!!
ஜெயலலிதாவின் மகள் என கூறும் ஜெ.ஜெயலட்சுமி புதிய கட்சி ஒன்றை துவங்கியது மட்டுமன்றி தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.
ஜெ.ஜெயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பு
கொடைக்கானலில் நேற்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த தன்னை ஜெயலலிதாவின் மகள் என கூறி கொள்ளும் ஜெ. ஜெயலட்சுமி, “ஜெயலலிதாவின் உண்மையான மகள் தானே என கூறி, சோபன்பாபுவே தன்னுடைய தந்தை என்றும், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரை இரண்டு முறை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், மருத்துவமனையில் அவரை ஒரு முறை சந்தித்ததாக தெரிவித்த ஜெ.ஜெயலட்சுமி, ஜெயலலிதா நடிகையாக இருந்த போது அவர் வசித்த வீட்டில் தான் தற்போது தான் வசித்து வருவதாகவும், ஜெயலலிதா எழுதிய டைரி, பயன்படுத்திய ஆடைகள் போன்றவை தன்னிடம் உள்ளது என்று கூறினார்.
சின்னமாக இரட்டை ரோஜா
பல காரணங்களுக்காக தன்னை வெளிப்படையாக ஜெயலலிதாவின் மகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை என சுட்டிக்காட்டி, ஜெயலலிதா மகள் என்பதற்கான DNA மரபணு சோதனைக்கான விவரங்களை நீதிமன்றத்தில் கொடுக்கவுள்ளதாவும் கூறினார்.
"அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம்" என்ற புதிய கட்சியை துவங்கிருப்பதாக அதிரடியாக தெரிவித்த ஜெ.ஜெயலட்சுமி, கட்சியின் சின்னமாக, இரட்டை ரோஜா சின்னத்தை வைத்திருப்பதாகவும், கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக தான் கொடைக்கானல் வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி 39 தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் என்றும் தனது அம்மா ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
