சசிகலாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து - பகீர் கிளப்பும் ஜெ தீபா

J Jayalalithaa Tamil nadu ADMK
By Karthick Aug 17, 2023 04:52 AM GMT
Report

சசிகலாவால் தனக்கும் தான் கணவர் உயிருக்கும் ஆபத்து உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

பூசாரி வழக்கு   

போயஸ் தோட்ட இல்லத்தில் தன்னை பூஜை செய்ய விடாமல் ஜெ தீப மற்றும்அவரது கணவர் மாதவன் இருவரும் ஆபாச சொற்களை பயன்படுத்தி மிரட்டுவதாக நேற்று சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

j-deepa-complaints-against-sasikala

இந்த புகார் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஜெ தீபா மற்றொரு அதிர்ச்சிகர புகாரை அளித்துள்ளார்.

சசிகலாவால் ஆபத்து 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெ தீபா, சசிகலாவின் தூண்டுதலால் குருக்கள் தன் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என குறிப்பிட்டு, ஹரிஹரன் தான் தன்னை ஒருமையில் பேசினார் என தெரிவித்தார்.

j-deepa-complaints-against-sasikala

சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தை அபகரிக்க முயற்சிக்கிறார் என குற்றம்சாட்டிய ஜெ தீபா, சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என தெரிவித்தார். மேலும் கொடநாடு கொலை விவகாரத்தில் சசிகலாவின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஜெ.தீபா புகார் அளித்திருக்கிறார்.