தற்கொலை பண்ணி செத்துடலாம்னு நினைச்சேன் : சிம்பு பட நடிகை பகீர் தகவல்

Ramya
By Irumporai Apr 01, 2023 06:15 PM GMT
Report

ஒரு சமயம் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக பிரபல நடிகை பரபரப்பு தகவல் கூறியுள்ளார்.

 நடிகை ரம்யா

கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் அபி படம் மூலம் நடிகையான ரம்யா சிம்புவின் குத்து படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.அதன்பினனர் கிரி, பொல்லாதவன்,வாரணம் ஆயிரம் , சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அப்போது அரசியல் மீது ஆர்வம் வந்தன் காரணமாக டந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு காங்கிரஸின் சோஷியல் மீடியா பிரிவின் தேசிய தலைவராக்கப்பட்டார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தார் ரம்யா இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரம்யா என் தந்தை ஆர்.டி. நாராயண் இறந்த இரண்டு வாரங்கள் கழித்து நான் நாடாளுமன்றத்திற்கு சென்றேன்.

தற்கொலை பண்ணி செத்துடலாம்னு நினைச்சேன் : சிம்பு பட நடிகை பகீர் தகவல் | Ivya Spandana Former Member Of The Lok Sabha

எனக்கு எதுவும் தெரியாது, யாரையும் தெரியாது. நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றி கூட தெரியாது. ஆனால் நான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். என் துக்கத்தையும் தாண்டி வேலையில் கவனம் செலுத்தினேன்.

தற்கொலை வேண்டாம்

என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அம்மா. அதன் பிறகு என் அப்பா. மூன்றாவது ராகுல் காந்தி. என் தந்தை இறந்தபோது மோசமான நிலையில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். எந்த பற்றும் இல்லாமல் இருந்தேன்.

தேர்தலிலும் தோல்வி அடைந்தேன். அது மோசமான நேரம். கவலை மட்டும் தான் இருந்தது. அந்த நேரத்தில் தான் ராகுல் காந்தி எனக்கு உதவி செய்தார் வாழ்க்கையில் பிரச்சனை வரும் போகும். அதற்காக தற்கொலை செய்து கொள்ள நினைக்கக் கூடாது ரம்யா.

நீங்கள் ரொம்ப தைரியமானவர் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். சந்தோஷமாக வாழுங்கள் என ராகுல் காந்தி ஆறுதல் கூறியதாக ரம்யா கூறியுள்ளார் ரம்யா தற்போது கன்னட படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.