தொகுதி பங்கீடு இறுதியானதா..?பேச்சுவார்த்தை நடத்திய திமுக - ஐ.யூ.எம்.எல்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பங்கீடு குறித்து முடிவு செய்திக்தா முதல் ஆளாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது ஐ.யூ.எம்.எல்(Indian union Muslim league) கட்சி
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டு தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவிற்கு மிக முக்கியமானதாகும். 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் அக்கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.
காரணம் காங்கிரஸ் அமைத்து வரும் மெகா எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியே இதற்கு காரணமாகும். நாடெங்கிலும் பாஜகவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து கட்சிகள் பலவற்றை இணைத்து பெரிய கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கி வருகின்றது.
முதற்கட்ட பேச்சுவார்த்தை
இதில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணியில் இணைய பல கட்சிகள் நேர்மறையான சூழலை வெளிப்படுத்தி வருகின்றது. அதற்கு மத்தியில் தான் இன்று, ஐ.யூ.எம்.எல் கட்சி திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இருகட்சிகளுக்கு இடையில் நடைபெற்றுள்ளது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தின், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையானதில் முதற்கட்டமாக தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.