வாத்தியாரே ..இது பாக்ஸிங்க விட ரத்த பூமி : வாத்தியாருக்கு வரவேற்பு கொடுத்த கபிலன்
நடிகர் பசுபதி டிவிட்டரில் தனது கணக்கை தொடங்கி உள்ள நிலையில் அவரை நடிகர் ஆர்யா வரவேற்பு கொடுத்த விதமும் அதற்கு பசுபதியின் பதிலும் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக இணையத்தில் வாத்தியாரை அழைத்துக்கொண்டு கபிலன் சுற்றாத இடங்களே இல்லை என்றே கூறலாம் ஒற்றை சைக்கிளை எடுத்துக்கொண்டு இருவரும் போகாத நாடுகளும் காணாத கண்டங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு உலகையே ரவுண்டு அடிக்க வைத்து விட்டனர்.
இவை எல்லாமே மீம்ஸ் கிரியேட்டர்களின் ஜாலம் தான் சார்பட்டாவில் வரும் அந்த காட்சியை மையமாக வைத்து எக்கச்சக்கமான மீம்கள் டிரெண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் நடிகர் பசுபதியின் பெயரில் பல்வேறு ஃபேக் ஐடிக்கள் டிவிட்டரில் உருவாக நேரடியாக களமிறங்கிய நடிகர் பசுபதி தனது அதிகாரபூர்வ ஐடியை உருவாக்கியிருக்கிறார்.
அதில் பசுபதியைவரவேற்கும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்: வாத்தியாரே இதான் ட்விட்டர் இது பாக்ஸிங்க விட ரத்த பூமி. உன்னோட பேர்ல இங்க நிறைய பேர் இருக்காங்கனு தெரிஞ்சதும், ஒரிஜினல் நான்தான்டானு வந்த பாத்தியா. உன் மனசே மனது தான். வா வாத்தியாரே இந்த வேர்ல்ட் உள்ள போலாம்'' எனபதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பசுபதி:ஆமாம் கபிலா, பாக்ஸிங்கே உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்லயே பின்னாடி உட்காந்துக்குறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போ'' என்று பதிவிட்டுள்ளார்.
Amam.. kabila, boxinge ulagamnu irunthutten, parambaraikku onnuna modha aala vandhuruven,naan vun cycle laye pinnadi okkandhukiren, enna ella edathukkum kootikinu po https://t.co/bkzzUBrKpc
— Pasupathy Masilamani (@PasupathyMasi) August 26, 2021
இவர்களின் வேடிக்கையான ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.