33 வயது காதலிக்கு 900 கோடி சொத்து - மனைவியை தவிக்கவிட்ட முன்னாள் பிரதமர்!

Italy
By Sumathi Jul 10, 2023 05:36 AM GMT
Report

முன்னாள் இத்தாலி பிரதமர் தனது காதலிக்கு 900 கோடி ரூபாயை விட்டுச் சென்றுள்ளார்.

சில்வியோ பெர்லுஸ்கோனி

இத்தாலியில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. தனது நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நடந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். தொடர்ந்து, நுரையீரல் தொற்றால் ஏற்படும் மைலோமோனோசைடிக் லுகேமியா பாதிப்பால் அவதிப்பட்டார்.

33 வயது காதலிக்கு 900 கோடி சொத்து - மனைவியை தவிக்கவிட்ட முன்னாள் பிரதமர்! | Italy Ex Pm Leaves 900 Crore For Girlfriend

இதனால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். சில மாதங்களுக்கு முன் உடல்நிலை மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது 86 வயதில் உயிரிழந்தார்.

காதலிக்கு சொத்து

அதனையடுத்து, அவரது பாட்னரான 33 வயது காதலி மார்டா பாசினாவுக்கு 100 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் 906 கோடி ரூபாயை விட்டுச் செல்வதாகத் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளது தெரியவந்தது. அவரது சகோதரர் பாவ்லோவுக்கும் 100 மில்லியன் யூரோ (ரூ. 906 கோடி), மாஃபியாவுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் தன்னுடன் கைதாகி சிறையில் இருந்த மார்செல்லோ டெல்'உட்ரி என்பவருக்கு 30 மில்லியன் யூரோ(271 கோடி).'

33 வயது காதலிக்கு 900 கோடி சொத்து - மனைவியை தவிக்கவிட்ட முன்னாள் பிரதமர்! | Italy Ex Pm Leaves 900 Crore For Girlfriend

முதல் மனைவி கார்லா எல்விரா டால் ஓக்லியோவுடன் பிறந்த குழந்தைகளான மெரினா மற்றும் பியர் சில்வியோ ஆகியோருக்கு நிறுவனத்தின் 53% பங்குகள்.ரண்டாவது மனைவி மூலம் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு 40% செல்வம் என எழுதி வைத்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களை இரண்டு மூத்த பிள்ளைகளுக்கு விட்டுச் சென்றுள்ளார். பிரதமர் 2 முறை திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். உயிழப்பிற்கு முன் காதலி மார்டா பாசினாவை டேட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.