காதலனுடன் வாழ்ந்து வந்த ஐடி பெண் ஊழியரின் நிலை - கதறும் குடும்பம்
காதலனுடன் வாழ்ந்து வந்த ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார்.
லிவ் இன் ரிலேஷன்ஷிப்
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நித்யா(26). இவரது தந்தை பாஸ்கர்(58). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். நித்யா அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.
தொடர்ந்து, கடந்த 8 மாதங்களாக கொடுங்கையூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பெண் தற்கொலை
இதனையடுத்து டீச்சர்ஸ் காலனியில் ஒரு வாடகை வீட்டில் நித்யாவும், பாலமுருகனும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், வ‘எனது பெற்றோர் வீட்டுக்கு வருகிறார்கள். அதனால், நீ வெளியே சென்றுவிட்டு பிறகு வா’ என பாலமுருகனிடம் நித்யா கூறியுள்ளார்.
அதன்படி, பாலமுருகன் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கையில் நித்யா வாயில் நுரை தள்ளியபடி படுக்கையறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீஸார் நித்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வீட்டில் இருந்த 25 பவுன் நகையும் காணாமல் போனதாக போலீஸிடம் பாலமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் காதலன் பாலமுருகன் மற்றும் அவரது பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.