நிலவை நெருங்கிய சந்திராயன்...விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படம்...வெளியிட்ட ISRO

India
By Karthick Aug 18, 2023 12:35 PM GMT
Report

சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் இடத்தை கடந்த 15-ஆம் தேதி எடுத்த புகைப்படத்தை தற்போது ISRO வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 பயணம்

சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "சந்திரயான்-3" விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது. நிலவின் தென் துருவப்பகுதி ஆய்வு பணிக்கான கடந்த மாதம் 14-ந்தேதி இந்த விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 

isro-releases-photo-of-moon

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட "சந்திரயான்-3" 40 நாள் பயணங்களில் புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர்   

இதனைத்தொடர்ந்து விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரைஇறங்கும் 'விக்ரம் லேண்டரை' நேற்று விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக பிரித்தனர். முன்னரே திட்டமிட்டபடி, வரும் 23-ந்தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலத்தை தரை இறக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

isro-releases-photo-of-moon

இந்த நிலையில் விக்ரம் லேண்டரால் கடந்த 15-ந்தேதி எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.