இந்தியாவில் ஏவப்பட உள்ள NISAR செயற்கைக்கோள் ...! - வெளியான தகவல்...!
இந்தியாவில் இஸ்ரோ - நாசா செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ - நாசா செயற்கைக்கோள் (NISAR)
நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், செப்டம்பரில் ஏவப்படுவதற்கு இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளது.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், இந்தியாவுக்கு அனுப்பப்படுவதற்கு முன், நாசா-இஸ்ரோ செயற்கை அப்பர்ச்சர் ரேடார் (NISAR) செயற்கைக்கோளின் இறுதி மின் சோதனையை மேற்பார்வையிட, அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்திற்கு (ஜேபிஎல்) கடந்த வெள்ளிக்கிழமை சென்றார்.
இது குறித்து எஸ்.சோமநாத் பேசுகையில், இப்பணியானது அறிவியல் கருவியாக ரேடாரின் திறனை வெளிப்படுத்தும். மேலும், பூமியின் மாறும் நிலம் மற்றும் பனி மேற்பரப்புகளை முன்னெப்போதையும் விட விரிவாக ஆய்வு செய்ய உதவும்.
நிசார் விண்கலம் அடுத்த ஆண்டுக்குள் யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் உள்ள செயற்கைக்கோள் பேருந்தில் ஒருங்கிணைக்கப்படும். இது மிகவும் சிக்கலான செயற்கைக்கோள்களில் ஒன்றாகும். ஜேபிஎல் மூலம் உருவாக்கப்பட்ட கூறுகள் சிறப்பாக உள்ளன என்றார்.
NASA-ISRO satellite gets 'auspicious' send-off before moving to India#ISRO #NASA #NISAR pic.twitter.com/t7nvkVGPit
— Natasha Baxi (@BaxiNatasha) February 4, 2023
NISAR- NASA ISRO Synthetic Aperture Radar, jointly built by @NASA & @isro got an auspicious send-off to India. To be launched on a GSLV MkII into SSO by 2024 first quarters. https://t.co/kzbG3d8GTy
— Pinky Rajpurohit 🇮🇳 (@Madrassan_Pinky) February 4, 2023