சந்திரயான்-3 நல்ல ஆரோக்கியத்தட்டுடன் இருக்கிறது; ஆனால் ஒரு சிக்கல் உள்ளது - ISRO தலைவர் வெளியிட்ட தகவல்!
சந்திரயா-3 மிஷன் குறித்து ISRO தலைவர் எஸ் சோம்நாத் பேசியுள்ளார்.
சந்திராயன் 3
கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சந்திரயான் 3 மிஷன் நிலவை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை சந்திரனின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பியிருந்தது. இந்நிலையில் மிஷன் (Chandrayaan-3 Mission) குறித்த சமீபத்திய தகவல் ஒன்றை இஸ்ரோவின் தலைவர் ஆன எஸ் சோம்நாத் (ISRO Chairman S Somanath) பகிர்ந்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில் 'இந்தியாவின் சந்திரயான் மூன் மிஷன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது மற்றும் சுற்றுவட்டப்பாதையை நிர்ணயிக்கும் செயல்முறை தான் இந்த மிஷனை மிகவும் சிக்கலான கட்டமாக இருக்கும்.
மேலும் சந்திரயான் 3 விண்கலம் 100 கிமீ என்ற தூரத்திலான வட்ட சுற்றுப்பாதையிலிருந்து சந்திரனுக்கு அருகில் செல்ல தொடங்கும் போது தான் சுற்றுவட்டப்பாதையை தீர்மானிக்கும் செயல்முறை நடக்கும். 100 கிமீ வரை எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. பூமியில் இருந்தபடியே லெண்டரின் நிலையை துல்லியமாக மதிப்பிடுவதில் மட்டுமே சிக்கல்கள் உள்ளன. இந்த அளவீடு மிகவும் முக்கியமான அளவீடு ஆகும்.
நாங்கள் அதை சுற்றுப்பாதை நிர்ணய செயல்முறை என்று அழைக்கிறோம். இது சரியாக நடந்தால் மட்டுமே மீதமுள்ள செயல்முறைகள் சரியாக நடக்கும் என்று சோம்நாத் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் 'சந்திரயான் 2 மிஷனிலின் இருந்து கிடைத்த அனுபவம் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். என்ன தவறு நடந்திருக்கும் என்பதை நாங்கள் ஆராய்ந்தோம். அந்த தவறுகள் சரிசெய்ய சந்திரயான் 3 மிஷனில் நிறைய மாற்றங்களை செய்துள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியுள்ளார்.