சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல் – கண்டனம் தெரிவிக்கும் ஐநா..!
சர்வதேச தடை சட்டத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.
இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் தடை
இந்த நிலையில் காசாவை இஸ்ரேல் முழுமையாக முற்றுவையிடுவது தவறு என்று ஐநா தெரிவித்துள்ளது. காசாவை இஸ்ரேல் முற்றுகையிடுவது சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை தலைவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசிய பொருட்களை பறித்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேல் முற்றுகையானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என வோல்கட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.