உ.பி.யில் இஸ்லாமிய இளைஞர் மீது கொலை வெறித் தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ வைரல்

viral video Uttar Pradesh அதிர்ச்சி வீடியோ Islamic youth Murder hysteria Murder attack இஸ்லாமிய இளைஞர் வெறித் தாக்குதல்
By Nandhini Mar 22, 2022 06:01 AM GMT
Report

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாட்டுக் கறி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், வடமாநிலத்தில் இஸ்லாமிய இளைஞரை ஒரு கும்பல் சராமரியாக தாக்குதல் நடத்துக்கிறது.

அவரின் சட்டையை கிழித்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தியது. அப்போது அந்த இஸ்லாமிய இளைஞர் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். ஆனாலும், அக்கும்பல் கொடூரமாக தாக்குகியது.

இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாணையில் இச்சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாக தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விலங்குகளின் சடலங்களை ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் ஓட்டுநரை கிராம மக்கள் சிலர் தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சோதனையிட்டபோது, மாட்டிறைச்சி மற்றும் மாடுகளின் எலும்புகள் இருந்தது.

மாடுகளை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டி 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரை அந்த கும்பல் சராமரியாக தாக்கியதாக தெரியவந்தது.

தற்போது அந்த இஸ்லாமிய இளைஞர் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் மார்தந்த் பிரகாஷ் சிங் தெரிவித்துள்ளார்.