தென்னிந்தியாவிலிருந்து முதல்முறையாக இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவரானார் ஐசரி கணேஷ்...!

Olympic Academy
By Nandhini Nov 15, 2022 10:34 AM GMT
Report

தென்னிந்தியாவிலிருந்து முதல்முறையாக இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவரானாக ஐசரி கணேஷ் வெற்றி பெற்றுள்ளார். 

ஐசரி கே.கணேஷ் வெற்றி

டெல்லியில் 2022-2026-ம் ஆண்டுக்கான இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்புத் தேர்தலில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஐசரி கே.கணேஷ் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, புதிய தலைவரான ஐசரி கே.கணேஷ் பேசுகையில், இந்திய தேக்வாண்டோ சம்மேளனம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக நிர்வாகிகள் தேர்தல் நடக்கவில்லை. கடந்த 3 மாதத்துக்கு முன்பு வந்த தீர்ப்பின் அடிப்படையில் இத்தேர்தல் நடத்தப்பட்டது.

கடந்த 46 ஆண்டுகளில் தேக்வாண்டோ சம்மேளனத்துக்கு தென்னிந்தியாவிலிருந்து முதல்முறையாக நான் தலைவராக வெற்றி பெற்றுள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேக்வாண்டோ வீரர்கள் பதக்கம் வெல்லும் அளவுக்கு உயர்தர பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.    

தென்னிந்தியாவிலிருந்து முதல்முறையாக இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவராகியுள்ள ஐசரி கே.கணேஷிற்கு சமூகவலைத்தளங்களில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

ishari-k-ganesh-olympic-academy-leader