நான் மட்டும் கடைசி வரை நின்றிருந்தால் 300 ரன் எடுத்திருப்பேன்... - இஷான் கிஷன் மாஸ் பேட்டி
நான் மட்டும் கடைசி வரை நின்றிருந்தால் 300 ரன் எடுத்திருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம் -
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி 410 ரன்கள் எடுத்து வங்காளதேச அணி இலங்கை நிர்ணயித்தது.
இதனையடுத்து, விளையாடிய வங்காளதேச அணி 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி சார்பாக பேட்டிங் செய்ய வந்த இளம் வீரர் இஷன் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கப்பட்டார்.
ஆரம்பம் முதலே மாஸாக விளையாடிய இவர் அதிவேகமாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். இவர் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து மாஸ் காட்டினார். இதனையடுத்து இவர் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.
இஷான் கிஷன் மாஸ் பேட்டி
இப்போட்டி குறித்து இஷான் கிஷன் பேசுகையில், 14.1 ஓவர்கள் மீதம் இருக்கையில் நான் ஆட்டம் இழந்து விட்டேன். கடைசி வரை நின்றிருந்தால் 300 ரன்களை அடித்திருப்பேன்.
இரட்டை சதம் அடித்த ஜாம்பவான் வீரர்களின் பட்டியலில் என் பெயர் சேர்ந்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. நல்ல பந்தாக இருந்தால் அடித்து ஆடுவது என்பது தான் எனது திட்டம். நான் என் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். என்றார்.
Ishan Kishan broke the Universe Boss’ record ???#crickettwitter #indvsban pic.twitter.com/9ZsI2pHZdt
— Sportskeeda (@Sportskeeda) December 10, 2022