இது தான் தளபதி சர்க்கார்..? திமுக எதிர்ப்பை உறுதிப்படுத்திய சம்பவம்..!
நடிகர் விஜய் அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடைபெற்ற கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்காதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
பங்கேற்காத விஜய்
கலைஞர் 100 நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில், அஜித் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் பங்கேற்கவில்லை என்பதை தாண்டி, அஜித் இப்படியான பொதுவிழாக்களில் எப்போதும் பங்கேற்பதில்லை. ஆனால், சென்னையில் இருந்தும் விஜய் அந்நிகழ்ச்சிக்கு வராதது தான் தற்போது ஹாட் டாபிக்.
தயாராகிறாரா விஜய்..?
அரசியல் களத்திற்கு தயாராகி வரும் விஜய், நேரடியாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, தனது இயக்கத்தின் சார்பில் பல சமூக பணிகளையும் செய்து வருகின்றார்.
அரசியல் வரும் நோக்கத்தில் விஜய் இருக்கிறார் என்றால், தமிழகத்தை பொறுத்தவரை அவர் முதலில் திமுகவை எதிர்ப்பது தான் முதல் பணியாக இருக்கும். ஆளும் கட்சியை எதிர்ப்பதால் மட்டுமே மற்றொரு கட்சி வளரமுடியும் என்பது அரசியல் தெரிந்த அனைவர்க்கும் தெரிந்த விஷயம் என்பதால், விஜய் அதே பாதையில் பயணிக்கிறார்.
அதன் வெளிப்பாடு தான் விஜய், கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதும். விஜயின் அரசியல் நோக்கங்கள் வெளிப்படையாகவே தெரியும் நிலையில், பலரும் இது குறித்து தற்போது பரபரப்பாக பேசி வருகின்றனர்.