அரசியல் பிரவேசம் - அழுத்தங்களை எதிர்கொள்ள ஆரம்பித்து விட்டாரா விஜய்..?
நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து விட்டதா என்ற கேள்விகள் எழதுவங்கியுள்ளன.
விஜய்யின் அரசியல் நகர்வு
கட்சி துவங்கி விரைவில் தீவிர அரசியலில் நடிகர் விஜய் ஈடுபடப்போவதாக நீண்டகாலமாகவே செய்திகள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனை உறுதிபடுத்தும் வகையிலேயே விஜய்யும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, நலத்திட்டங்களை துவங்குவது என பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
அதே நேரத்தில் சமீபத்தில் இல்லை நீண்ட காலமாக விஜய்யின் படங்கள் தொடர்ந்து அரசியல் சிக்கலில் நெருக்கடிகளை சந்தித்து தான் வருகின்றது. அப்படி ஒரு பிரச்சனை இல்லாம விஜய் படம் வெளியாகிறது என்று கூறினாலும், அதனை விஜய் பட ரசிகர்களே நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு விஜய் படங்கள் பிரச்சனைகளை சந்தித்துள்ளன.
அரசியல் நெருக்கடிகள் காரணமா..?
அதே தான் தற்போதும் லியோ படத்திற்கு தொடர்கிறது. லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி மும்முரமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென ரத்தானது. விஜய் மட்டுமின்றி திரைஉலகிற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், பலரும் இது திமுகவின் அரசியல் காழ்புணர்ச்சியே என அதிரடியாக தெரிவித்தனர்.
இருப்பினும் படக்குழு தரப்பில், இது அரசியல் முயற்சிகள் இல்லை என கூறப்பட்டாலும், மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் திமுக மீது தான் குற்றம்சுமத்தி இருக்கின்றனர். விஜய் சினிமாவில் தமிழகத்தின் அடையாளம். பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஆனால் அதெல்லாம் வாக்குகளாக அவர் அரசியலுக்கு வந்தால் மாறுமா? என்றால் அது விவாத்திற்குரியதே. ஒரு கணிசமான வாக்குகளை விஜய் திராவிட கட்சிகளிடம் இருந்து பறித்தாலும், அது வெற்றியை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமானதே.