I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகும் முக ஸ்டாலின்?...மாலை வெளியாகவுள்ள அறிவிப்பு
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இன்று அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 10 ஆண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிட காங்கிரஸ் கட்சியும் பெரும் முன்னைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தான் நாட்டிலுள்ள 26 கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை காங்கிரஸ் கட்சி திரட்டியுள்ளது. இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு முறை பீகார் மற்றும் பெங்களுருவில் இரண்டு கூட்டங்களை நடத்தி தேர்தல் குறித்து விவாதித்துள்ளது.
ஒருங்கிணைப்பாளர் முக ஸ்டாலின்
இக்கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இன்று இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் ஏன் எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கம் முதலே இந்த கூட்டணி குறித்து வலுவாக பேசிவரும் தமிழக ,முதலமைச்சரும், திமுக தலைவருமான முஆத் ஸ்டாலின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மாலை 3 மணி அளவில் கூட்டணி தலைவர்கள் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதே போல இந்த தேர்தலுக்கான இலச்சினையும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அது குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.