தமிழகத்தில் தனித்து தான் போட்டியா..? பொடி வைத்த அண்ணாமலை
நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு பிறகு அக்கட்சி மீண்டும் தமிழகத்தில் தனித்துதான் போட்டியா? என்ற கேள்விகள் எழ துவங்கியுள்ளன.
தமிழக அரசியல் களம்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தற்போதே தீவிர பணியில் இறங்கியுள்ளன. குறிப்பாக முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அதிக மும்முரம் காட்டி வருகின்றன. திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் பார்ட்டி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் மீண்டும் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டன.
ஆனால் மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது தொடர்பாக பல முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக - பாஜகவை தவிர்த்து அடுத்த பிரதான கட்சி என்றால் அது பாமக தான். அக்கட்சி என்ன கூட்டணிக்கு அடுத்து நகரும் என்பது பெரும் அரசியல் நகர்வாக இருக்கும். அதே நேரத்தில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவையும் யாருடனான கூட்டணிக்கு நகருவார்கள் என்பதும் முக்கியமான ஒன்றே.
தனித்து போகுமா பாஜக..?
இந்த சூழலில் தான் நேற்று முதல் பாஜகவின் கருத்துக்கள் பெரும் அரசியல் நகர்விற்கான முதல் அடிகளா? என்ற எண்ணங்கள் எழுகின்றன. கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கேசவ விநாயகம், பாஜக தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல என கூறி கூட்டத்திற்கு சென்றார். அதனை ஒரு சில வழிகள் மூலம் உறுதிப்படுத்தும் வகையில், கட்சி கூட்டத்திற்கு தாமதமாக வந்த அண்ணாமலை, பேசும் போது தமிழகத்தில் அனைத்து தொகுதி பூதங்களில் பெண்களை சேர்க்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
பெண்களை வலிமைப்படுத்து என்பது கட்சியை அடிப்படை ரீதியில் வலிமையுடைய செய்யும். அதே போல கூட்டணி குறித்து மறைமுகமாக சொன்ன அண்ணாமலை, தனது நிலைப்பாட்டை கூறிவிட்டதாக தெரிவித்து விட்டதாக கூறி அடுத்த முடிவுகளை தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என கூறினார். அதே போல செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியில் இருந்து சென்றதற்கு மகிழ்வதோ, வருத்தப்படவோ ஒன்றும் இல்லை என கூறியது மறைமுகமாக ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திகிறது. இன்னும் கூட்டணி குறித்தான எந்த முடிவுகளும் பாஜக இது வரை எடுக்கவில்லை என்ற நிலைப்பாடும் தெரிகிறது.