ஓபிஎஸ்'ஸை பாஜக ஒதுக்குகிறதா? - செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பதில்..!
பாஜகவை பொறுத்தவரை யாரையும் ஒதுக்கவில்லை என குறிப்பிட்ட அண்ணாமலை, கட்சியில் யாரை அங்கீகரிக்கவேண்டும், யாரை கூப்பிடவேண்டும் என்பதை குறித்து அதிமுக தான் முடிவு செய்யவேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நல்லதொரு மாற்றம் வர வேண்டும்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி பெரும் மாற்றங்களை செய்துள்ளார் என பெருமிதம் கூறினார்.
இந்த நடைபயணம் மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக தான் கருதுவதாக குறிப்பிட்ட அவர், இந்த பயணத்தின் மூலம் நல்லதொரு மாற்றம் வர வேண்டும் என்பதே தங்களது நோக்கி என குறிப்பிட்டார்.
வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என இலக்குடன் பயணித்து வருவதாக கூறி, மோடியின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை காணமுடிகிறது என்று கூறினார்.
மோடியை ஏற்றுகொள்ள வேண்டும்
கூட்டணியை பொறுத்தவரை பாஜக யாரையும் வெறுக்கவில்லை என குறிப்பிட்ட அண்ணாமலை, ஆனால் அதிமுக கட்சியை பொறுத்தவரையில் யாரை அங்கீகரிக்கவேண்டும் யாரை அழைக்கவேண்டும் என்பதை கட்சி தான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்து, கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் அவர்கள் மோடியை ஏற்றுகொள்ள வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக பாஜகவைல இணைந்ததாக குறிப்பிட்டு, டெல்லிக்கு செல்ல தனக்கு விருப்பமில்லை என்றும் தனது அரசியல் தமிழகத்தில் தான் இருக்கவேண்டும் என்றும் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.