கோலி, ரோஹித் கிடையாது - அயர்லாந்து வீரர் படைத்த அபார சாதனை!
டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார்
பால் ஸ்டிர்லிங்
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தும், ஓருநாள் போட்டியை ஆப்கானிஸ்தானுக்கு வென்றது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார்.
சாதனை
இந்த 2 பவுண்டரிகளையும் சேர்த்து இதுவரை 401 பவுண்டரிகளை அவர் டி20 போட்டிகளில் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த வரிசையில் தற்போது பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள், பாபர் ஆசம் - 395 பவுண்டரிகள், விராட் கோலி - 361 பவுண்டரிகள், ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள், டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள் ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.