IRCTC: இனி 8 மணி நேரத்திற்கு டிக்கெட் புக் செய்ய முடியாது - புதிய சிக்கல்
டிக்கெட் புக்கிங் தொடர்பான புதிய விதியை ரயில்வே அமல்படுத்தியுள்ளது.
டிக்கெட் புக்கிங்
IRCTC கணக்கில் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உங்களால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

இந்த புதிய விதியால், முகவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு, உண்மையான பயனர்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும். டிசம்பர் 29 முதல் ஆதார் இல்லாதவர்கள் காலை 8-12 மணி வரை டிக்கெட் புக் செய்ய முடியவில்லை.
புதிய விதி
ஜனவரி 5 முதல், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 12 முதல், ஆதார் இல்லாத பயனர்கள் நாள் முழுவதும் டிக்கெட் புக் செய்ய முடியாது. இனி டிக்கெட் புக் செய்யும்போது, உங்கள் IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐ பயன்படுத்திய பிறகே டிக்கெட் உறுதி செய்யப்படும். இதே முறை ரயில் நிலைய கவுன்ட்டர்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
டிக்கெட் அல்லது OTP தொடர்பான சிக்கல்களுக்கு, IRCTC உதவி எண் 139-ஐ அழைக்கலாம். ஆதார் தொடர்பான சிக்கல்களுக்கு, UIDAI உதவி எண் 1947-ஐத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.