ஈரானில் 500க்கு மேற்ப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை : வெளியான அதிர்ச்சி தகவல்
ஈரான் அரசாங்கம் கடந்த வருடங்களை விட 2022-இல் 500க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் அதிகரித்த தூக்கு
நார்வேயை தலைமையிடமாக கொண்ட மனித உரிமை ஆணையமானது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி , ஈரானில் 2022 இல் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டியுள்ளது.

இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகம் என கூறியுள்ளது. இது குறித்து ஈரான் மனித உரிமைகள் இயக்குனரான மஹ்மூத் அமிரி-மொகத்தம், இதில் பலருக்கு நியாமான நீதிமன்ற விசாரணை இல்லாமல் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் தண்டனைகள் சட்டபூர்வமானதாக இல்லை. என கூறியுள்ளார்.
வெளியான அதிர்ச்சி தகவல்
2021 அறிக்கையில் உள்ள அனைத்து மரணதண்டனைகளிலும் 83.5 சதவீதம் (278 மரணதண்டனைகள்) அதிகாரிகளால் அறிவிக்கப்படவில்லை என்றும், அதில் குறைந்தபட்சம் 55 சதவீதம் (183 மரணதண்டனைகள்) கொலைக் குற்றங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக, 2021இல் குறைந்தது 139 மரணதண்டனைகளும் 2010 முதல் தற்போது வரையில் 3,758 க்கும் மேற்பட்ட மரணதண்டனைகளும் நீதிமன்றங்கள் வழங்கிய மரண தண்டனைகள் ஆகும்.