சாலையில் கட்டிப்பிடித்து நடனமாடிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை - பரபரப்பு சம்பவம்...!
ஈரானில் சாலையில் கட்டிப்பிடித்து நடனமாடிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடனமாடிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் மிக கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டு பெண்களுக்கு அரசு கடுமையான சில கட்டுப்பாட்டுக்களை விதித்துள்ளது. பொது வெளியில் செல்லும் போது பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்.
பொது இடங்களில் நடனம் ஆடுவது மற்றும் பாட்டு பாடுவதற்கு அனுமதி கிடையாது. வேறொரு ஆணுடன் ஒன்றாக ஆடல், பாடல்களில் ஈடுபட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஆஸ்தியாஜ் ஹகீகி என்ற இளைஞர், தனது வருங்கால மனைவி ஆமிர் முகமது அகமதியுடன் பிரசித்தி பெற்ற ஆசாதி கோபுரம் முன்பு கட்டிப்பிடித்து, ஒரு காதல் பாட்டுக்கு நடனமாடியுள்ளனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அவர்கள் இருவரும் மிகவும் பிரபலமடைந்தனர்.
இந்நிலையில், இஸ்லாமிய சட்ட விதிகளை மீறிய அவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், ஈரான் சட்ட விதிப்படி அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் வரை சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
A court in #Iran sentenced a couple to 10.5 years in prison for dancing in the street, the Al Arabiya newspaper reported.
— NEXTA (@nexta_tv) January 31, 2023
They were accused of conspiring to undermine national security and engaging in anti-regime propaganda. pic.twitter.com/EWrsSgohQs