கொரோனா பரவல்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய ஆலோசனை

Corona Tamil Nadu Stalin
By mohanelango May 21, 2021 07:33 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மாவட்ட வாரியாக அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் கண்கானிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை! சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்!