ஐபிஎல் கிரிக்கெட்:விராட் கோலி நடத்தை குறித்து ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை
ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி மோசமாக நடந்து கொண்டதற்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார். பின்னர், விரக்தியுடன் வெளியேறிய கோலி, பெவிலியனில் வீரர்கள் அமர்வதற்காக போடப்பட்டிந்த நாற்காலியை பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு சென்றார்.
இதில் கோலியின் நடத்தைகள் அனைத்தும் காணொளியாக பதிவாகியுள்ளன. இதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் இது குறித்து விராட் கோலிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெற்றால் போட்டி ஊதியத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.