டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியாவுக்கு கொரோனா
டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்டியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா கடந்த 6-ந் தேதி மும்பை வந்து 7 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்தார்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தலின் போது அன்ரிச் நோர்டியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்திய கிரிக்கெட் வாரிய கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறையின் படி அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். அப்போது அவரிடம் கடைசி 2 நாட்கள் உள்பட 5 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகு தான் களம் இறங்க முடியும்.
ஏற்கனவே டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.