ஐபிஎல் போட்டிகள் தேதி அறிவிப்பு - பிசிசிஐ
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் டி20 தொடரின் எஞ்சியப் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளில், 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
இந்த நிலையில் எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு ராஜீவ் சுக்லா அளித்தப் பேட்டியில், ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெறும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஐபிஎல் போட்டியின் தேதிகளால் டி20 உலகக் கோப்பை பாதிக்கப்படாது என்றும் வீரர்களுக்கு போதுமான நேரமும் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.