மைதானத்திலேயே சுருண்டு விழுந்த சிஎஸ்கேவின் எல்லை சாமி பிளெசில் - சென்னை ரசிகர்கள் சோகம்!

csk ipl blazil
By Anupriyamkumaresan Jun 13, 2021 11:09 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

நேற்று பீல்டிங்கில், பிளெஸில் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்ததால் அவரது ரசிகர்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

சிஎஸ்கே அணியின் எல்லை சாமி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் பாப் டூ பிளெஸிஸ். ஏப்ரல் மாதம் ஐபிஎல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிளெஸிஸ் சொந்த நாடு திரும்பினார்.

இதற்குப் பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் தொடரில் கலந்துகொண்டார்.

மைதானத்திலேயே சுருண்டு விழுந்த சிஎஸ்கேவின் எல்லை சாமி பிளெசில் - சென்னை ரசிகர்கள் சோகம்! | Ipl Match Csk Blacil Affect In Field Get Treatment

நேற்றைய போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும், பெஷாவர் ஜால்மி அணியும் மோதி கொண்டன.. குவெட்டா அணிக்காக விளையாடிய, பிளெஸிஸ் வேகமாக பந்தை தடுக்க முயன்றார். அதே சமயத்தில் மற்றொரு வீரரான முகமது ஹஸ்னைனும் பந்தை நோக்கி ஓடி வந்தார்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பிளெஸிஸ் வேகமாக ஹஸ்னைனின் முட்டியில் மோதியதில்,அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் பீல்டிங்கிலேயே சுருண்டு மயங்கினார்.

மைதானத்திலேயே சுருண்டு விழுந்த சிஎஸ்கேவின் எல்லை சாமி பிளெசில் - சென்னை ரசிகர்கள் சோகம்! | Ipl Match Csk Blacil Affect In Field Get Treatment

உடனடியாக மருத்துவக் குழு விரைந்து அவரை அழைத்து சென்று சிகிச்சையளித்தனர்.. ஆனால் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளதால், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செப்டம்பரில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருப்பதால் அதில் டு பிளெஸிஸ் கலந்துகொள்வாரா என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.

மேலும், விரைவில் குணமடைந்து மைதானத்துக்குத் திரும்புங்கள் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.