கட்டம் கட்டிய ராஜஸ்தான் ... தட்டிதூக்கிய சிஎஸ்கே.. கடைக்குட்டி சிங்கமான ஜடேஜா
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2021 தொடரின் 12 ஆவது போட்டி ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியில் டூ பிளசிஸ் 33 ரன்களும், அம்பதி ராயுடு 27 ரன்களும், மொயீன் அலி 26 ரன்களும் அடித்தனர்.
இந்த நிலையில் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதை இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் மட்டுமே சிறப்பாக விளையாடி 49 ரன்களை அடித்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால்சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சென்னை அணியில் மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும், சாம் குர்ரான் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் மற்றும் பிராவோ தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
குறிப்பாக ஜடேஜா தனது அசத்தலான கேட்சுகள் மூலம் தடுமாறிய சி எஸ்கே அணிக்கு கடைக்குட்டி சிங்கம்போல செயல்பட்டு அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார் ஜடேஜா.
A resounding victory for @ChennaiIPL against #RR by 45 runs.
— IndianPremierLeague (@IPL) April 19, 2021
4 fine catches and 2 wickets for @imjadeja ??#VIVOIPL pic.twitter.com/xMtP2v2elL
இந்த வெற்றி மூலம் 4 புள்ளிகளைப் பெற்று 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது சென்னை அணி.