இனி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஐபிஎல் வருவது கஷ்டம் தான் - ஒன்று சேர்ந்த முன்னணி நிறுவனங்கள்

sonypictures zeeentertainment iplauction2022
By Petchi Avudaiappan Dec 23, 2021 12:29 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதற்கு 2 முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் களமிறங்க உள்ள நிலையில் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே 2 புதிய அணிகளின் மூலம் ரூ.12,725 கோடி வருமானத்தை பிசிசிஐ ஈட்டிய நிலையில் அடுத்த 30 நாட்களில் ரூ.40,000 கோடி வருமானமாக வர காத்துள்ளது. தற்போது 2018 முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.

இதனை அப்போது ரூ.16,347.50 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஏலத்தில் எடுத்திருந்தது. இதனையடுத்து 2023ம் ஆண்டு ஐபிஎல் முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஏலத்திற்கு தான் ரூ.40,000 கோடி எதிர்பார்க்கப்படுகிறது. இது பழைய ஒப்பந்தத்தை விட 3 மடங்கு அதிகம் ஆகும். 

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த ஏலத்திற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் என பல முன்னணி ஜாம்பவான்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். 

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக சோனி நிறுவனம் மற்றும் ஜீ எண்டர்டெயிண்மெண்ட் ( Zee Entertainment) நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளது. இவர்களின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.15,000 கோடியாகும். 

இரு நிறுவனங்களுக்கு இடையேயும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, டிஸ்னி ஹாட் ஸ்டாருக்கு போட்டியாக வருவதற்கு திட்டமிட்டுள்ளது.