ஐபிஎல் பைனலுக்கு இப்படி ஒரு ராசி இருக்கு; அப்போ கப் ஆர்சிபிக்குதான் - குஷியில் ரசிகர்கள்
ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்சிபி அணி
ஏழு ஆண்டுகளாக முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியே ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்ற நிலை உள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.
கோப்பையை வெல்லுமா?
ஆனால், 2016ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி இதேபோல முதல் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும் அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.
எனவே, இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடையுமா, அல்லது கடந்த ஏழு ஆண்டுகளாக முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் கோப்பையை வெல்லும் ராசி தக்கவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.