சிஎஸ்கேவால் இதைகூட பண்ண முடியல; வெட்கத்தை விட்டு சொல்றேன் - பிளெம்மிங் ஆதங்கம்!
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அணி குறித்து புலம்பியுள்ளார்.
சிஎஸ்கே தோல்வி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது ஆறு பந்துவீச்சாளர்கள் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால், லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போனது.
கடைசி 5 ஓவர்களில் அதிக ரன் கொடுத்து சிஎஸ்கே தோல்வியடைந்தது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டீபன் பிளெம்மிங்,
பிளெம்மிங் வேதனை
"முதலில் ஒரு பிட்ச் இருந்தது, அது ஸ்பின் பந்துவீச்சில் பந்து நன்றாக திரும்பியது. அதை வைத்து நாங்கள் வென்றோம். ஆனால், இந்த பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. பிட்ச்சுக்கும், எங்களின் திட்டத்துக்கும் நல்ல ஒற்றுமை இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
வெட்கத்தை விட்டு சொல்கிறேன். இது சொந்த மைதானம். இங்கே சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும். ஸ்கோரை தற்காத்து வெற்றி பெற வேண்டும். எனவே, இது சரியாக அமையாத போது வெற்றி பெறுவது மிகவும் கடினம். எங்களுக்கு அணி சரியாக அமையவில்லை" என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.