ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்படும் வீரர்கள் இவர்கள் தான் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ipl2022
By Petchi Avudaiappan Nov 30, 2021 05:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ஐபிஎல் 2022 தொடரில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில்  புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

 இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி) ஆகிய 3 பேரை மட்டுமே தக்கவைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா (16 கோடி), ஜஸ்பரீத் பும்ரா (12 கோடி), கெய்ரன் பொல்லார்ட் (6 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வால் (14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி) ஆகியோரை மட்டும் தக்கவைத்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.   டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி), பிரித்வி ஷா (7.5 கோடி), ஆன்ரிக் நோர்க்கியா (6.5 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆண்ட்ரே ரஸல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.