பேருக்கு அரசு பள்ளி ஆசிரியர் ; ஆனால் செய்வதோ..குடித்துவிட்டு வகுப்பறையில் உறங்குவது - வைரலாகும் புகைப்படம்

teachersleepsinclass intoxicatedteacher telanganagovernmentschool studentscomplaint
By Swetha Subash Mar 31, 2022 07:13 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

மதுபோதையில் பள்ளி வகுப்பறையில் படுத்து உறங்கும் ஆசிரியரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள சிட்டபோயன்ன கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் சசிகாந்த் என்ற ஆசிரியர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளார்.

அவர் பணியில் சேர்ந்தது முதல் தினமும் மது குடித்து விட்டு பள்ளிக்கு செல்வதும், வகுப்பறையில் மது போதையில் படுத்து உறங்குவதையும் வாடிக்கையாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர் சசிகாந்த் தினமும் குடித்து விட்டு வந்து, பாடம் ஏதும் நடத்தாமல் தூங்குகிறார் என குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து அப்பகுதி இளைஞர் ஒருவர் வகுப்பறைக்குள் சென்று அங்கு ஆசிரியர் சசிகாந்த மதுபோதையில் நாற்காலியில் படுத்து தூங்கிகொண்டிருந்ததை பார்த்தார்.

அதனை தொடர்ந்து சசிகாந்தை தட்டி எழுப்பிய இளைஞர் அவர் வகுப்பறையில் பாடம் எடுக்காமல் உறங்கிக்கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூங்கிகொண்டிருந்த வீடியோ சமூக வலைதளைங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து ஆசிரியர் என்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் இந்த போதை ஆசாமியை பணி நீக்கம் செய்து வேரு ஒருவரை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.