இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பாலோவர்களை பெற்று விராட் கோலி புதிய சாதனை - ரசிகர்கள் உற்சாகம்
இந்திய கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை 150 மில்லியன் பேர் பின்தொடருவதால், கோலி புதிய சாதனையை அடைந்துள்ளார். இன்ஸ்டகிராம் எனப்படும் சமூக பக்கத்தில் பிரபலங்களை பின்தொடருவது ரசிகர்களின் வழக்கமான செயலாகும்.
அதிகம் புகழ்பெற்ற பிரபலங்களை அதிகமானோர் பின்தொடருவர். உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரம், தலைவர்கள் போன்றோரின் சமூக பக்கங்களை அதிகம் அதன்படி இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏற்கனவே அதிகமான மக்களை பின்தொடர்ந்து வந்தனர்.
தற்போது அவ்வாறு பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 150 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் இந்த சாதனையை அடையும் முதல் இந்தியர் என்ற பெருமையை தற்போது விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்திய அளவில் ஏற்கனவே அதிக பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கோஹ்லி தற்போது 150 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்று புதிய சாதனையை பெற்று உள்ளார்.