வெளியே தல காட்ட முடியல; ஓடும் ரயிலில் ஆபத்தான ரீல்ஸ் - மன்னிப்பு கேட்ட பெண்
ஓடும் ரயிலில் ஆபத்தான ரீல்ஸ் செய்து வெளியிட்ட பெண் மன்னிப்பு கெட்டுள்ளார்.
ஆபத்தான ரீல்ஸ்
கன்னியாகுமரி, தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா பானு. இவர் இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை ரீல்ஸாக பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், ரயிலில் நின்று படிக்கட்டில் தனது ஆபத்தினை உணராமல் நடனமாடி ரீல்ஸ் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோ வைரலாகி பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இவர் மீது ரயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை வலுத்தன.
இதனைத் தொடர்ந்து போலீசார் சகிலா பானுவை வலைவீசி தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்பட்டது. தற்போது, இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ஷகீலா, " நான் எப்போதும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவது வழக்கம். அப்படித் தான் விளையாட்டாக இந்த வீடியோவையும் எடுத்து போட்டேன்.
மன்னிப்பு கேட்ட பெண்
ஆனால் அது இவ்வளவு பெரிய பிரச்சினையாகும் என எனக்கு தெரியவில்லை. விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது. இந்த வீடியோ போட்ட பிறகு என்னால் வெளியே கூட வர முடியவில்லை. பேப்பர்கள் சமூக வலைதளங்கள் தொலைக்காட்சிகளில் எனது வீடியோவை தலைப்பு செய்தி ஆக்கிவிட்டார்கள்.
ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட ரீல்ஸ் - மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு.
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) June 2, 2025
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த ஷகிலா பானு.
ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட ரீல்ஸ் வைரலாக,
இப்பெண் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என… https://t.co/9DVKDrOWyf pic.twitter.com/w9FFPHxaDF
உண்மையில் இதுபோன்று நடக்கும் என எனக்கு தெரியாது. உண்மையில் ஒருவேளை நான் இப்படி போடும் போது ஏதாவது சிலிப்பாகி இருந்தால் என் உயிருக்கே கூட ஆபத்து வந்திருக்கும். கை கால் இல்லாமல் போயிருக்கும். எனவே இளைஞர்கள் யாரும் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம்.
எனது பழைய வீடியோவையும் டெலிட் செய்து விட்டேன். ஆனாலும் தற்போது அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். தற்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். நீங்களும் அப்படி செய்யாதீர்கள்.இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.