2வது டெஸ்டில் இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை 2வது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
4 வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கூட்டணி தான் இந்தத் தொடரில் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தெரிவித்த நிலையில், ஷர்துல் தாகூர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அவருக்கு பதிலாக அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.