அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து விபத்து - பிறந்து 5 நாட்களே ஆன ஆண்குழந்தை காயம்..!
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விபத்து 5 நாள் ஆன ஆண் குழந்தை தலையில் காயம் அடைந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி இவரது மனைவி முத்துலட்சுமியின் இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது தாய் மற்றும் குழந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து குழந்தை கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இது எடுத்து குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்ததாகவும் குழந்தையின் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும் குழந்தையின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
நேரமாகியும் குழந்தையை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்காத மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும் தரமற்ற கட்டில் போன்ற வாகனங்கள் மருத்துவமனையில் இருப்பதாக பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது அரசு மருத்துவமனைகளில் கட்டில் உடைந்து குழந்தை காயம் அடைந்து இருப்பது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.