நான்காவது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணி - பிரதமர் மோடி வாழ்த்து!

Hockey Prime minister Narendra Modi India
By Jiyath Aug 13, 2023 06:55 AM GMT
Report

நான்காவது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹாக்கி சாம்பியன்ஷிப்

ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 10 நாட்களாக சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் 3 முறை சாம்பியனான இந்திய அணி மலேசிய அணியை எதிர்கொண்டது.

நான்காவது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணி - பிரதமர் மோடி வாழ்த்து! | Inidan Hockey Team Won Asian Championship Trophy

போட்டியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தனர். இரண்டாவது கால் பகுதியில் மலேசிய அணி மேலும் இரண்டு கோல்கள் அடித்தது. இதனால் மூன்றுக்கு ஒன்று என மலேசிய அணி முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி விளையாட்டை தீவிரப்படுத்தியது.

நான்காவது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணி - பிரதமர் மோடி வாழ்த்து! | Inidan Hockey Team Won Asian Championship Trophy

பின்னர் இரண்டு கோல்கள் அடித்து சமன் செய்தது இந்திய அணி. போட்டியின் 56வது நிமிடத்தில் ஆகாஸ்தீப் சிங் கோல் அடித்து, இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் போட்டியின் முடிவில் நான்கிற்கு மூன்று என்ற கணக்கில் கோல்களை அடித்து இந்திய அணி 4வது முறையாக அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதில் இந்திய அணியினருக்குத் தங்கப் பதக்கங்களையும், மலேசிய அணியினருக்கு வெள்ளிப் பதக்கங்களையும் , மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'இந்திய வீரர்களின் சோர்வில்லா அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி, தளராத உறுதித்தன்மையால் 4 ஆவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் நாடு பெருமை கொள்கிறது. இந்திய வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் தனது வாழ்த்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.