இந்தோனேசியாவில் பூனை,நாய் இறைச்சி விற்பனைக்கு அதிகாரிகள் தடை - மீறினால் கடும் நடவடிக்கை!
இந்தோனேசியாவில் பூனை,நாய் இறைச்சி விற்பனைக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
பூனை, நாய் விற்பனை
உலகில் நாய், பூனை இறைச்சி விற்பனையை அனுமதிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும். அங்கு கசாப்பு கடைகளில் உயிருள்ள விலங்குகளை கொன்று விற்பது வழக்கமாக நடந்து வருகிறது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள டோமோஹோன் சந்தையில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் நாய்கள் மற்றும் பூனைகளை கொன்று விற்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த இறைச்சிகளை சாப்பிடுவதில்லை. ஆனால் சுலவேசியில் உள்ள மினாஹாசா மக்கள் நாய் மற்றும் பூனை இறைச்சியை உண்பது பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.
விற்பனைக்கு தடை
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாரிகள் இந்த விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். இதுகுறித்து டோமோஹோன் நகரத்தின் செயலாளர் திரு எட்வின் ரோரிங், நாய்கள் மற்றும் பூனைகளின் வியாபாரத்தில் இருந்து டோமோஹோன் முற்றிலும் விடுபட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தடையை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.