தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடையும்? ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்
கடலூரின் கழுதூரில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார், இம்மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேசுகையில், மக்கள் நலன் கருதியே இந்திய ஜனநாயக கட்சியை தொடங்கினோம், 15 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருகிறோம், கல்விக்காக நிறைய தொண்டுகள் செய்து வருகிறோம்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் என்னவெல்லாம் செய்தேன் என்பது மக்கள் அறிவார்கள். எங்கள் கட்சியின் நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது தான்.

மத்திய அரசோடு எப்போதும் எதிர்ப்பு என்ற நிலை மேற்கொண்டிருந்தால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடையும்? இதனால் இழப்பு தமிழ்நாட்டிற்கு தான்.
திராவிடக் கட்சிகள் வந்த பின்னர் தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மாணவர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் இல்லாத நிலை தான் உருவாகியிருக்கிறது, மக்கள் இதை கவனிக்க வேண்டும்.
இப்படியே இது தொடருமானால் இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்? வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என பேசினார்.
இந்த மாநாட்டின் விளம்பரம் தொடர்பான பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது, ஊடகப் பணிகளை ஒருங்கிணைத்த வேந்தர் தொலைக்காட்சியின் தலைமை இயக்க அதிகாரி மணிகண்ட பூபதி முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.