திடீரென கோவிலுக்கு போன இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் - ஏன் தெரியுமா?

Kerala Rishabh Pant Indian Cricket Team
By Thahir Jan 15, 2023 04:44 AM GMT
Report

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோவிலில் கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனம் 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இன்றைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேரளா வந்துள்ளனர். இலங்கைக்கு எதிராக நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Indian cricket team players suddenly went to the temple

ரிஷப் பண்டின் உடல் நிலைக்காக வேண்டி கொண்ட வீரர்கள் 

மேலும், கோயில் வெளியே இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோவிலுக்கு சென்ற வீரர்கள் அனைவரும் ரிஷப் பண்ட் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டி கொண்டதாகவும் கூறப்படுகிறது.