நாங்க ரெடி, நீங்க ரெடியா? நியூசிலாந்துடன் மோத தயாரான இந்திய அணி
ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்கான நேற்று முன்தினம் இரவு மும்பையில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்தது.
இறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டனர். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், உமேஷ் யாதவ், பும்ரா சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இருந்து எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டுள்ளனர். இறுதிப் போட்டி வருகிற 18-ம் தேதி நடைபெற இருக்கிறது.
We are in Southampton @RishabhPant17 ? pic.twitter.com/9qebdWFFPO
— Rohit Sharma (@ImRo45) June 3, 2021