அதிரடி காட்டிய விராட் கோலி...இந்திய அணி 179 ரன்கள் குவிப்பு

Indian Cricket Team T20 World Cup 2022
By Thahir Oct 27, 2022 08:55 AM GMT
Report

டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது.

விராட் கோலி,ரோகித் சர்மா அதிரடி ஆட்டம் 

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது.

டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 9 ரன்னில் அவுட் ஆனார்.

Indian team accumulated 179 runs

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதமடித்த ரோஹித் சர்மா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Indian team accumulated 179 runs

அதன் பின் கோலி – சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய கோலி 62 ரன்களும், சூரியகுமார் 51 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது.