கண்ணா இது வெறும் டிரைலர் தான், மெயின் பிக்ச்சர் இன்னும் வரல - அரங்கை அதிரவைத்த ஜனாதிபதி!
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டமளிப்பு விழாவில் பேசியது வைரலாகி வருகிறது.
ஜனாதிபதி
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து அவர் சிக்பள்ளாப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார், அங்கு சத்யசாய் என்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதில் கலந்துகொண்ட அவர் பேசியது அரங்கில் இருந்தவர்களை சிலிர்க்க வைத்து.
பேச்சு
இதனை தொடர்ந்து, அவர் மேடையில் பேசுகையில், "பல்வேறு துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் இந்தியாவில் நிகழும் மாற்றத்தின் ஒரு பார்வையை முன்வைக்கிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் எங்கள் மகள்கள் முதல் 4 ரேங்க்களுக்குள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
சம வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் நம் மகள்கள் நம் ஆண்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது. இது இந்தியாவில் நிகழும் மாற்றம் மற்றும் நமது நாட்டின் பொன்னான எதிர்காலத்தின் ஒரு பார்வை" என்று அவர் கூறினார். மேலும், "யே டூ டிரெய்லர் ஹை. பிக்சர் அபி பாக்கி ஹை. (இது வெறும் டிரெய்லர். முக்கியப் படம் இன்னும் வெளிவரவில்லை)" என பிரபல இந்தி திரைப்படத்தின் வசனத்தை அவர் கூறுகையில் அரங்கத்தில் இருந்தவர்கள் கரகோசத்தை எழுப்பினர்.