ஏப்ரலில் ஐபிஎல் தொடர் தொடக்கம்? - வெளியான முக்கிய தகவல்
ஏப்ரல் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் இங்கிலாந்து வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -
டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இதில், 10 அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்யவுள்ள வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது.
ஒரு இந்திய வீரர் பெயர் கூட இடம்பெறவில்லை -
மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 741 பேர் இந்தியர்கள். 14 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கு பெற பதிவு செய்துள்ளனர். அதில் ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகபட்சமாக 57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி, ரூ. 1.50 கோடி, ரூ. 1 கோடி , ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம் என பட்டியல் நீடிக்கிறது.
இந்த ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் அதில் ஒரு இந்திய வீரர் பெயர் கூட இடம் பெறவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை வரவழைத்துள்ளது.
ஐபிஎல் தொடர் தொடக்கம்?
இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1ம் தேதி குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ளதால் மே 28 அல்லது ஜூன் 4ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.