சச்சின், கோலியெல்லாம் இல்ல; பவுலின் போட விரும்பாத இந்திய வீரர் அவர்தான் - கிரேம் ஸ்வான்!
முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 'கிரேம் ஸ்வான்', தான் பந்துவீச விரும்பாத இந்திய வீரர் குறித்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் இத்தொடர் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 'கிரேம் ஸ்வான்', தான் பந்துவீச விரும்பாத இந்திய வீரர் குறித்து தெரிவித்துள்ளார்.
விரும்பாத பிளேயர்
அவர் பேசியதாவது "விராட் கோலியை கூட அத்தொடரின் முதல் போட்டியிலேயே நான் அவுட்டாக்கினேன். நீங்கள் நல்ல பந்துகளை வீசினால் கண்டிப்பாக அவரை அடிக்கடி அவுட் செய்ய முடியும்.
ஆனால் அந்த தொடரில் நான் பந்து வீச விரும்பாத ஒரு பேட்ஸ்மேனாக புஜாரா இருந்தார். ஏனெனில் அவர் தன்னுடைய காலில் வேகமாக செயல்படக் கூடியவர்.
அப்போது சச்சின், விவிஎஸ் லட்சுமணன், வீரேந்திர சேவாக் மற்றும் விராட் கோலி ஆகியோர் இருந்தனர். ஆனால் அந்த பேட்ஸ்மேன்களில் புஜாராவுக்கு எதிராக மட்டும் நான் பந்து வீச விரும்ப மாட்டேன்" என்று கூறியுள்ளார்.